×

யார் தாதா என்ற போட்டியில் வாலிபருக்கு வெட்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் சரண்: 3 பேருக்கு வலை

 

அண்ணாநகர், ஜூலை 11: ஏரியாவில் யார் பெரிய தாதா என்ற போட்டியில், வாலிபரை சரமாரியாக வெட்டிய வழக்கில் 5 பேர் போலீசில் சரணடைந்தனர். நெற்குன்றம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் காளை (எ) சவுந்தரபாண்டி (23). இவருக்கும், நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்த கோகுல் (19), திருமலை (19) ஆகியோருக்கும் இடையே நீண்ட காலமாக ‘‘ஏரியாவில் யார் பெரிய தாதா’’ என்ற தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, காளை நெற்குன்றம் சக்திநகர் 15வது தெருவில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் பேசிகொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த 8 பேர் கும்பல், காளையை சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர்.

தகவலறிந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த காளையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 சிறுவர்கள் உட்பட 5 பேர், கோயம்பேடு காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

இவர்கள், நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்த கோகுல் (19), திருமலை (19), மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 3 பேர் என்பதும், யார் தாதா என்ற போட்டியில் காளையை வெட்டியதும் தெரிந்தது. இதையடுத்து கோகுல், திருமலை ஆகியோரை நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 3 சிறுவர்களை கெல்லீஸில் உள்ள அரசு சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கு சம்பந்தமாக தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

The post யார் தாதா என்ற போட்டியில் வாலிபருக்கு வெட்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் சரண்: 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Yaar Dada ,Charan ,Annanagar ,Yar Periya Dada ,
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை...